குடிப்பதற்கு பணம் கொடுக்காத தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்!!

குடிப்பதற்கு பணம் கொடுக்காத தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்!!

சிவகங்கையில் மது அருந்த பணம் தராத தந்தையை, மகனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், அரசினம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முகுந்தன் மதுபோதைக்கு அடிமையாகி, தினமும் மதுவருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் முழு போதையில் இருந்த முகுந்தன், தனது தந்தையிடம் மேலும் மது அருந்த பணம் தருமாறு கேட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததை அடுத்து தந்தை என்றும் பாராமல், கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் இது தொடர்பாக தகவலறிந்து சென்ற போலீசார், செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, முகுந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.