அதிக வட்டிக்கு பணம் கொடுத்த பெண்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்!

போடியில் வட்டி பணம் கேட்டு தகாத வார்த்தையில் தனது குடும்பத்தாரை பேசிய பெண்னை வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிக வட்டிக்கு பணம் கொடுத்த பெண்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்!
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர் பவுன் தாய். கணவரை இழந்து தனியாக வசித்து வரும் இவர் வட்டி தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், போடி ஜக்கம நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பிரபு. இவர் பவுன் தாயிடம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக அவரசத் தேவைக்காக வட்டிக்கு ஒரு லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், வட்டி கேட்டு பவும் தாய் பிரபுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தகாத வார்த்தைகளால் பவுன் தாய் பிரபுவின் குடும்பத்தாரை திட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து இச்சம்பவத்தை அறிந்த பிரபு பவுன் தாய் வீட்டிற்கு சென்று இதுப்பற்றி கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்குமிடையே தகராறு முற்றியதில் பிரவு தான் கொண்டு சென்ற கத்தியால் பவுன் தாயை சரமாரியாக தாக்கி குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பவுன் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதைதொடர்ந்து கொலையாளி பிரபு தாமாகவே போடி நகர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com