கள்ளக்காதலனுடன் ஓடிப்போன ரஞ்சிதா!! அக்காவோடு சேர்ந்து கதையை முடித்த கணவர்!

கள்ளத்தொடர்பை கைவிடாததால் தாயும், கணவரும் சேர்ந்து இளம்பெண்ணை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
கள்ளக்காதலனுடன் ஓடிப்போன ரஞ்சிதா!! அக்காவோடு சேர்ந்து கதையை முடித்த கணவர்!
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார். அவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். அவருடைய மனைவி ரஞ்சிதா, இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ள நிலையில் திடீரென ரஞ்சிதா இறந்து விட்டதாக கூறி அவரது கணவரும், ரஞ்சிதாவின் தாய் கவிதாவும் சேர்ந்து எரித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரணையில், ரஞ்சிதாவின் தாயும் கணவனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றது உறுதியானது.

ரஞ்சிதாவுக்கும், ஆனைமலையன்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், அதனை கைவிட மறுத்த நிலையில் ரஞ்சிதாவின் தாயும், கணவரும் திட்டமிட்டு சேலையால் கழுத்தை இறுக்கி கொன்றது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்யாணகுமார், கவிதா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆனந்தகுமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com