திருவண்ணாமலையில் கொள்ளையில் ஈடுபட்ட விசித்திர திருடன்....

திருவண்ணாமலையில் கொள்ளையில் ஈடுபட்ட விசித்திர திருடன்....

திருவண்ணாமலை அருகே தங்க நகை, பணம், வெள்ளி  பொருட்கள் இருக்க பட்டுப் புடவை மற்றும் பித்தளை பாத்திரங்கள் திருடப்பட்ட வித்தியாச கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் சம்பத்.   தனது மனைவியுடன் வசித்து வரும் அவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் ஆவார்.   இவரும் இவரது மனைவியும் நேற்று மாலை தங்களது வீட்டை பூட்டிக் கொண்டு புதுச்சேரிக்கு உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்த பொழுது, நேற்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் முன்பக்க கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் இருந்த துணி மணிகளை கீழே உதறி தள்ளிவிட்டு பின்னர் பூஜை அறைக்கு மேலே வைக்கப்பட்டிருந்த பித்தளை பாத்திரங்கள் மற்றும் பட்டுப் புடவைகளை அங்கிருந்து அள்ளிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தச்சம்பட்டு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்த பொழுது 20 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 60 ஆயிரம் வைத்த இடத்திலேயே இருந்ததாகவும், கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் பட்டுப்புடவைகள் மற்றும் பித்தளை பாத்திரங்களை மட்டும் அள்ளிச் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தச்சம்பட்டு காவல் துறையினர் கொள்ளையன் குறித்து கைரேகை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கொள்ளையன் கண் எதிரிலேயே 20 சவரன் தங்க சங்கிலிகள், வளையல்கள், மோதிரம் ரூபாய் 60 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவைகள் அங்கேயே இருந்த போதிலும் அவைகளை எடுத்துச் செல்லாமல் பழைய பட்டுப்புடவைகள், பித்தளை பாத்திரங்களை மட்டும் கொள்ளையடித்துச் சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:    நீலகிரியில் ஏற்பட்ட தீ விபத்து.... மீட்பு பணிகள் தீவிரம்!!