பகையால் நேர்ந்த விபரீதம்...குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!

சென்னையில், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்த கணேஷின் சகோதரர் குமரேசன் வெட்டப்பட்ட சம்பவத்தில், 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தந்தை பெரியார் திராவிடக் கழகத்தில் ராயப்பேட்டை பகுதி செயலாளராக பதவி வகித்து வருபவர் கணேஷ். இவரது சகோதரர் குமரேசனுக்கும், தந்தை பெரியார் திராவிட கழக சென்னை மாவட்ட செயலாளர் டிங்கர் குமரனுக்கும், முன்விரோதம் இருந்தாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்...!

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி ஐஸ்அவுஸ் பகுதியில் சென்றுகொண்டிருந்த குமரேசனை, டிங்கர் குமரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குமரேசன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், டிங்கர் குமரன் அவரது கூட்டாளிகள் சசிகுமார், ராஜா, பிரசாந்த் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.