ஆபாச வீடியோ.. பிறப்புறுப்பை அறுப்பேன்.. கையில் அரிவாளை எடுத்த வீரலட்சுமி.. அனல் பறக்கும்வீடியோ

ஆபாச வீடியோ அனுப்பியவர்களுக்கு அரபு நாட்டு தண்டனை கொடுக்க போவதாக வீரலட்சுமி வார்னிங் தந்துள்ளார்.

ஆபாச வீடியோ.. பிறப்புறுப்பை அறுப்பேன்..  கையில் அரிவாளை எடுத்த வீரலட்சுமி.. அனல் பறக்கும்வீடியோ

ராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி (வயது 35). இவர்  தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர்.. தேசிய தலைவர் பிரபாகரன் சிலை அகற்றிய விவகாரம், ஆந்திராவில் தமிழர் படுகொலை என தமிழகத்தில் பரபரப்பு நிகழ்வுகளின் மூலம் மீடியாக்களின் கவனத்தை கவர்ந்தவர்.

இதற்கு பிறகு சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் தலையிட்டு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தவர். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் "மை இந்தியா பார்ட்டி" சார்பிலும் போட்டியிட்டவர்.

தேர்தல் சமயத்தில், இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு ஆபாச வீடியோக்கள் மர்ம நபர் யாரோ அனுப்பியுள்ளனர். இது குறித்து வீரலட்சுமி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசாரும் பதிவு செய்து விசாரிணை மேற்கொண்டு வந்தனர்.. அப்போது சிறிது நாளில் மறுபடியும் வீரலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. அந்த வீடியோவில் "எனக்கு இப்படி ஆபாச வீடியோ அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை.. அவரை 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் நானே அந்த நபரை கண்டுபிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் மார்க்கெட்டில் கட்டி வைத்து, பிறப்புறுப்பையும் அறுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிடுவேன்" என மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போன அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில், கையில் அரிவாளை எடுத்து "ஏற்கனவே இதுபோற் சம்பவங்களில் புகார் தந்தேன்.. ஆனால் போலீசார் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை.. இப்போது வீடியோ அனுப்பிய நபர்கள் தானாகவே 15 நாட்களுக்குள் போலீசில் சரணடையாவிட்டால், அரபி நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் "அந்த" மாதிரி தண்டனை ஒன்றை வழங்க போகிறேன்" என்று வார்னிங் தந்துள்ளார்..

அதுமட்டுமல்ல, வீடியோ அனுப்பிய 2 பேருக்கும் 15 நாட்களில், தான் கொடுக்க போகும் அந்த விபரீத தண்டனைக்காக வீர தீர செயல்களுக்கான விருதையும் தனக்கு வழங்க வேண்டும் என்று அரிவாளுடன் பேசியுள்ளார் வீரலட்சுமி.. ஏற்கனவே நிர்வாணமாக்கி, பிறப்புறுப்பை கட் செய்வதாக சொல்லி இருந்தார் வீரலட்சுமி.. இப்போது அரபு நாட்டு தண்டனை என்று கையில் அரிவாளை வைத்து கொண்டு ரெடியாக நிற்கிறார்.