60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை அடித்து கொன்ற கிராம மக்கள்...

60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை அடித்து கொன்ற கிராம மக்கள்...

60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தாக்கிய நபரை கிராம மக்களே அடித்து கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர்  மண்டலத்திலுள்ள அப்பிகானிபள்ளி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை அதே ஊரை சேர்ந்த மூர்த்தி என்பவர் மூதாட்டியை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த 4 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மூதாட்டி துடித்து கொண்டு இருந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் கிராம மக்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து மூதாட்டியை மீட்ட கிராம மக்கள் அருகில் இருந்த புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூதாட்டிக்கு ஏற்பட்ட இந்த கொடூரத்தை பார்த்து ஆவேசமடைந்த கிராம மக்கள், தன்னுடைய வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புங்கனூர் போலீசார் விரைந்து சென்று மரணமடைந்த மூர்த்தி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.