விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3-வது நாளாக தொடரும் விசாரணை..!

விருதுநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3-ம் நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்..  பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3-வது நாளாக தொடரும் விசாரணை..!
Published on
Updated on
1 min read

விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகாரில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நான்கு பேரை நாளை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com