திமுக நிர்வாகி மிரட்டியதால், ராஜினாமா செய்யும் வார்டு உறுப்பினர்கள்!!

திமுக நிர்வாகி மிரட்டியதால், ராஜினாமா செய்யும் வார்டு உறுப்பினர்கள்!!

மதுரையில் ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான, திமுக ஒன்றிய செயலாளர் தலையீடு செய்து மிரட்டுவதாக கூறி 6 வார்டு களை சேர்ந்த உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு, கோவிலாங்குளம் ஊராட்சியின் ஊராட்சிமன்ற தலைவராக, ஜெயந்தி என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கோவிலாங்குளம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் 100 நாட்கள் வேலை திட்டம், சாலை அமைத்தல் உள்ளிட்ட அரசு திட்ட பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறியும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் , ஊராட்சிமன்ற கூட்டம் முறைகேடாக நடத்துவது, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற லஞ்சம் பெறப்படுவதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை, வார்டு உறுப்பினர்கள் முன்வைத்துள்ளுனர்.

இந்நிலையில் முறைகேடு குறித்தும், முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி செயலாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குற்றச்சாட்டு வைத்ததால், தங்களை தகுதி நீக்கம் செய்துவிடுவதாக  ஊராட்சிமன்ற தலைவரின் கணவரும்,செல்லம்பட்டி திமுக ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவராகவும் உள்ள முத்துராமன், தங்களை மிரட்டுவதாக கூறி வார்டு 1 உறுப்பினர் , வார்டு 2, வார்டு3, வார்டு 4, வார்டு 9, வார்டு 12 உறுப்பினர்கள்,  தங்களது வார்டு பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி ராஜிநாம் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் வழங்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் தலைமையில் உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பினால் தகுதி நீக்கம் செய்வதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாகவும் , மேலும் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான திமுக ஒன்றிய செயலாளர் முத்துராமன் தலையிட்டு வார்டு உறுப்பினர்களை மிரட்டுவதாகவும் க்குற்றம் அட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்; தமிழ்நாடு அரசு ஆணை!