பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல்நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்

சென்னையில் காவல் நிலையத்தில் பணிப்புரியும் தட்டச்சு அமைச்சு பெண்  பணியாளருக்கு பாலியில் தொல்லை கொடுத்த வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல்நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்

சென்னையில் காவல் நிலையத்தில் பணிப்புரியும் தட்டச்சு அமைச்சு பெண்  பணியாளருக்கு பாலியில் தொல்லை கொடுத்த வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வரும் அமைச்சு பெண் பணியாளரிடம் அதே காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த வெங்கடேசன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், அவரின் உதட்டைக் கடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அமைச்சுப் பணியாளர் இது குறித்து தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திரன் நாயரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் வெங்கடேசனை அதிரடியாக எம். ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்து இணை ஆணையர் உத்தரவிட்டார். மேலும், பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் நிலைய எழுத்தர் வெங்கடேசனிடம் அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.