காதலிக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு! பெண்ணின் தந்தை, தாய், சகோதரிக்கு காதலன் கத்திக்குத்து…   

காதலிக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு! பெண்ணின் தந்தை, தாய், சகோதரிக்கு காதலன் கத்திக்குத்து…  

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்பவர் நேதாஜி சிலை சந்திப்பு அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சந்திரகலா. இவர்களுக்கு ரேகா உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளனர்.  
Published on

இதில் ரேகா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மற்ற இருவருக்கும் திருமணமாகவில்லை. இவர்களில் பட்டதாரியான 3-வது மகள் குடியாத்தம் பவளக்கார தெருவைச் சேர்ந்த முகேஷ் என்பவரஒ காதலித்து வந்துள்ளார். எனினும் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 3-வது பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை காதலியின் வீட்டிற்கு சென்ற முகேஷ், தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியின் தந்தை சந்திரசேகரனை குத்தினார். இதனை தடுக்க முயன்ற மனைவி சந்திரகலாவுக்கும், மகள் கவுரிக்கும் கத்திக்குத்து விழுந்தது. இவர்களின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் காதலன் முகேஷ் தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்த மின்வயரில் உரசியதால் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.

கீழே குதித்ததிலும் தலையில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டனர். முகேஷை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சந்திரசேகரன், சந்திரகலா, கவுரி 3 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com