காதலனை ஒழுங்காக சந்திக்க முடியாததால் கணவரைக் கொல்ல முயற்சி செய்த கொடூரம்...

கள்ளத்தொடர்பைக் காக்க, கணவரை கொலை செய்ய முயற்சி செய்த மனைவி உட்ப்பட இருவர் கைதாகியுள்ளனர்.
காதலனை ஒழுங்காக சந்திக்க முடியாததால் கணவரைக் கொல்ல முயற்சி செய்த கொடூரம்...

திருமணத்தைத் தாண்டிய உறவு கொள்பவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் என சட்டம் ஒரு சில தளர்வுகளும் சுதந்திரமும் கொடுத்துள்ளது. இருந்தாலும், நமக்காகவே ஒரு சில கட்டமைப்புகள் இருந்து கன்னியம் காப்பது நம் கையில் தான் இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது. ஆனால், ஒரு சிலர் எல்லைகளை மீறி எல்வதைத் தாண்டி, சென்ற நம்மை யாரும் ஏதும் செய்யக்கூடாது என்பதை மறந்து கொலை வரை சென்று வருகின்றனர்.

மதுரை | திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு வயது 35. இவருக்கும் இராமநாதபுரத்தை சேர்ந்த 24 வயதான வைஷ்ணவிக்கும் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருக்கிறது. என்ஜினீயரான செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஊருக்கு வருவார். அவ்வகையில், மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பின் தொடர்ந்து வந்து, திடீரென செந்தில்குமார் மீது மோதி அவரை கீழே சாய்த்தனர். பின் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் அவரை வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த செந்திலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செந்தில் குமாருக்கு ஒரு நபருடன் பூர்வீக சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அவர் தான் ஆட்களை வைத்து கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பாலை இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கணவர் இறந்த நேரத்தில், தன்னை தாக்கியதாக வழக்கு பதிவு செய்ததோடு அதனை உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்றும் மேற்கொண்ட செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால், செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்ஃபோன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டதில், வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான 25 வயதான வெங்கடேசனுக்கும் திருமணத்தை மீறிய இருந்தது தெரியவந்தது. 

செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி நினைத்துள்ளார்.

எனவே வெங்கடேசன் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். 

அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். கூலிப்படையினரை தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் வைத்திருப்பது தவறு என்று கூறுவதா, இல்லை கணவன் இல்லாத நேரம் வந்த காதலை நினைத்து வருந்துவதா, இல்லை, கள்ளக்காதலுக்காக கணவரையே கொல்ல முயன்ற மனைவியைக் கண்டு கோபப்படுவதா என்ற பல கேள்விகள் இந்த வழக்கைச் சுற்றி இருக்கிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com