உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தம்பதி

திருச்சி தென்னூர் அருகே தம்பதியினர் உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தம்பதி
Published on
Updated on
1 min read

திருச்சி தென்னூர் அருகே தம்பதியினர் உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாபிராமன் தெருவில் வசித்து வரும் நடராஜன் (51) மகாலட்சுமி (49) தம்பதியினர் இன்று காலை உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலை முயற்சித்தனர். உடல் முழுவதும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 108க்கு அழைப்பு விடுத்து தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

வறுமையின் காரணமாகவும்,குழந்தை இல்லாத விரக்தியில் இருவரும் சில வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் உடலில் பெட்ரோலை ஊற்றி, தீக்குளித்த உள்ளனர், 90 சதவீத தீக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com