கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவருடன் நடிகை பேசும் ஆடியோ வெளியானது... 

மலேசியப் பெண்ணான நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அளித்த புகார் விவகாரத்தில் நடிகை சாந்தினியும் கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவரும் கருக்கலைப்பு தொடர்பாக உடையாடும் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவருடன் நடிகை பேசும் ஆடியோ வெளியானது... 

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகார் விவகாரத்தில் காவல் துறையினர் முன்னாள் அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாந்தினி குறிப்பிட்ட கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் அருண் என்பவருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரிணை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் நடிகை சாந்தினி மலேசியாவில் இருந்தபோது கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் அருணுக்கு தொலைபேசியில் அழைத்து அவருடன் உரையாடும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ பதிவின் மூலம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் மருத்துவர் அருணும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவது தெளிவாகிறது.

அந்த ஆடியோ பதிவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் நடிகை சாந்தினி கர்பமடைந்து பலமுறை கருக்கலைப்பு செய்துகொண்டதை மருத்துவர் அருண் நடிகை சாந்தியிடம் ஒப்புக்கொள்வது போன்ற உடையாடல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நடிகை சாந்தினி மணிகண்டனால் தனது வயிற்றுப் பகுதியில் காயம் மற்றும் தழும்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், தனது வீட்டாருக்கு பதில் கூறமுடியாமல் இன்னலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மருத்துவர் அருணிடம் கூறி புலம்பும் உரையாடல்கள் பதிவாகியுள்ளது.

மேலும், தன்னை ஆபாச வார்த்தைகளால் கொச்சையாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசி வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக அப்போதைய முதல்வரை சந்தித்து நேரடியாக புகார் அளிக்கவுள்ளதாகவும் நடிகை சாந்தினி மருத்துவர் அருணிடம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு அறிவுரை வழங்குமாறு மருத்துவர் அருணிடம் கேட்க அதற்கு நான் கூறுவதை அவர் கேட்கமாட்டார் என்ற பதிலை கூறிய உரையாடலும் அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், மருத்துவர் அருணையும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரக்குறைவாக பேசியுள்ளார் என்பதை அவரிடம் கூறி அவருக்கு உதவி செய்ய வேண்டாம் என சாந்தினி கேட்டுக் கொள்வதும் அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே காவல்துறை தரப்பில் கோபாலபுரம் தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி மருத்துவர் அருணை விசாரிக்க தீர்மானித்துள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளுக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்கும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆடியோ பதிவு சாந்தினி புகாரில் குறிப்பிட்டுள்ள கருக்கலைப்பை மருத்துவர் அருண் ஒப்புக்கொள்வது போன்ற உரையாடல் என்பது முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. 

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கட்டாயக் கருக்கலைப்பு என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ள நிலையில் இந்த ஆடியோவில் மருத்துவர் அருண் கருக்கலைப்பு நடைபெற்றதை ஒப்புக்கொண்டுள்ளதால் மணிகண்டன் மட்டுமல்லாது மருத்துவர் அருணும் இந்த வழக்கில் சிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்தகட்ட காவல்துறையின் விசாரணையில் இந்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறித்து தெரியவரும். மேலும், இவ்விவகாரத்தில் அதே மருத்துவமனையைச் சேர்ந்த தாய்சேய் நல மருத்துவருக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.