முன்னால் டி.ஜி.பி க்கு சிறை தண்டனை! 

முன்னால் டி.ஜி.பி க்கு சிறை தண்டனை! 

விழுப்புரம்: பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தப்பட்ட முன்னால் டி.ஜி.பி க்கு தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பாதுகாப்புக்காகச் சென்றிருந்தார். அப்போது  பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி..ஜி.பி. ராஜேஷ் தாஸ்க்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் 80க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். 

இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆறு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி,  முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதேப்போல், முன்னாள் எஸ்,பி கண்ணனுக்கு சிறை தண்டனை இல்லை என்றும், 500 ரூபாய் அபராதம் விதித்து ஆணையிட்டார்.

இதையும் படிக்க: அடுத்த கைது டி ஆர் பாலு? : பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமர் பிரசாத் ரெட்டி பேச்சு!