இந்தப் படிப்பிற்கான செலவு 39 லட்ச ரூபாய் ஆகும் எனவும் கூறியதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பல்வேறு தவணைகளில் 38 லட்சத்து 89 ஆயிரத்து 550 ரூபாய் தான் அவர்களிடம் செலுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு நீண்ட நாட்களாகியும் அட்மிஷன் தொடர்பாக எந்தவித தகவலும் இல்லாததால் தொடர்ந்து சௌகார்த்திகா மற்றும் கார்த்திக்கை அணுகியதாகவும், பின்புதான் தனக்கு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது போன்ற கடிதத்தை தனக்கு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அவர்களை நம்பி வெளிநாடு செல்வதற்காக விசா பெற முயன்றபோதுதான், தான் வைத்திருந்த அட்மிஷன் கடிதம் மற்றும் ஆவணங்கள் போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.