மேலும், ஸ்டூடியோவிலுள்ள உள் அறைக்குள் தான் சென்று திரும்பி வந்து பார்க்கும் பொழுது, தனது செல்போனையும், அந்த நபரையும் காணவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இதனை அடுத்து ஸ்டூடியோவில் உள்ள சிசிடிவி காட்சியை தான் ஆய்வு செய்தபோது அந்த நபர் செல்போனை திருடிச் சென்றது பதிவாகியிருந்ததாகவும் கூறி தனது செல்போனை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடும் அந்த நபரை தேடி வருகின்றனர்.