பெண் வழக்கறிஞருக்கே வாட்ஸ் அப் மூலம் ஆபாச படம்..  மர்ம நபரை சுற்றிவளைத்து பிடித்த போலீசார்.! 

பெண் வழக்கறிஞருக்கே வாட்ஸ் அப் மூலம் ஆபாச படம்..  மர்ம நபரை சுற்றிவளைத்து பிடித்த போலீசார்.! 
Published on
Updated on
1 min read

கோவையில் பெண் வழக்கறிஞருக்கே ஆபாச படங்களை அனுப்பிய நபரை சைபர் க்ரைம் போலீசார் கைதுசெய்தனர். 

கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவ பெண் வழக்கறிஞர் ஒருவரின் வாட்ஸ் அப்பிற்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து  ஆபாச படங்க வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுபோன்று அனுப்பாதீர்கள் என்று எச்சரித்துள்ளார். 

ஆனால், வேறு வேறு எண்களிலிருந்து மீண்டும் மீண்டும் அந்த பெண் வழக்கறிஞருக்கு அந்த நபர் தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து அந்த பெண் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரின்பேரில், மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது கண்டறியப்பட்டது. 

அதனை தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்தான் அந்த பெண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்பியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அந்த பெண்ணின் நம்பர் இவருக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை நடந்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com