தனியார் பேருந்தில் மோதி இளம்பெண் உயிரிழப்பு...

அமைந்தகரை பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பேருந்தில் மோதி இளம்பெண் உயிரிழப்பு...

சென்னை | நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜாரத்தினம்(22). இவர் தனது மனைவி சங்கீதா(20) உடன் கேடிஎம் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு மெரினா கடற்கரைக்கு சென்றுவிட்டு நெற்குன்றம் திரும்பி உள்ளார்.

அவர்கள் இருவரும், சுமார் 9 மணியளவில் அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா ஆர்ச் எதிரே வரும்போது எழும்பூரில் இருந்து கோயம்பேடு வழியாக காரைக்குடிக்கு பயணிகளை ஏற்றில் கொண்டு சென்ற தனியார் பேருந்தை (அய்யா டிராவல்ஸ்) முந்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த மனைவி உள்பட 3 பேர் கைது...

அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் சங்கீதா நிலைத்தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கே-4 அண்ணாநகர் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | நல்லது செய்ய முயன்றவர் அரிவாள் வெட்டுடன் மருத்துவமனையில் அனுமதி...