7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களாக பெய்து வரும் நிலையில், தற்போது 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

தற்போது வடகிழக்கு பருவமழை காரண்மாக, இரண்டு நாட்கள் தொடர்ந்து கனமழையாக பெய்து வரும் நிலையில், மழையின் தாக்கம் சிறிது குறைந்து காணப்படுகிறது. ஆனாலும், பல பகுதிகளில் தற்போது வரை மழை பெய்த படியே உள்ளது.

கடந்த மாதம் அக். 29ம் தேதி துவங்கிய மழையானது கடந்த இரண்டு நாட்களாக மோசமாகியுள்ளது என்றே சொல்லலாம். பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களில் மழை நின்ற பாடே இல்லை.

மேலும் படிக்க | குளம் போல் மாறிய குடியிருப்பு பகுதிகள்...

கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வருகிற 6ம் தேதி வரை, ஒரு சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையைப் பொறுத்த வரை தொடர்ச்சியாக வானம் மேக மூட்டமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, இன்றும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க |  மக்களுக்காக அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்... வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாரா?

கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் இடியுடம் கூடிய மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க |  வெள்ளத்தில் சூழ்ந்த நகரங்கள்... ஆரஞ்சு அலர்ட் உண்மையா?


கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 வாந்தி மயக்கம் அடைந்துள்ளதால் துரித உணவகத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் டெல்டா என்கின்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 200 பேருக்கு கிருஷ்ணகிரி நகரில் இயங்கி வரும் சக்தி ஃபாஸ்ட் ஃபுட் என்கின்ற கடையிலிருந்து நேற்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி வந்து பணி செய்யும் இடத்தில் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென்று 12 பெண்கள் 14 ஆண்கள் என 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பிவைத்தனர். 26 வட மாநில தொழிளாலர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 12 பெண்கள் 14 ஆண்கள் என மொத்தம் 26 நபர்களுக்கு வயிற்றுப்போக்கு மட்டும் வாந்தி ஏற்பட்ட சம்பவம் பகுதியில் சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் சக்தி  ஃபாஸ்ட் ஃபுட் கடையின் உரிமையாளர் சென்னப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் முதற்கட்டமாக சக்தி சிக்கன் ரைஸ் கடையின் உள்ள சிக்கன் மற்றும் உணவு பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது கிருஷ்ணகிரி நகரில் இயங்கி வந்த சக்தி பாஸ்ட் புட் கடைக்கு நகராட்சி ஆணையர் வசந்தி, கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதா நவாப், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி மற்றும் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடைக்கு முறையான அனுமதி மற்றும் ஆவணங்கள் சமர்பித்து பின் கடை மீண்டும் திறக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  

மேலும் கடைக்கு எதிரே கே தியேட்டர் எனும் திரையரங்கு செயல்பட்டு வருகிறது அங்கு ஆய்வு மேற்கொண்ட நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் தியேட்டரில் உள்ள கழிவறை மற்றும் கேண்டீன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். சுகாதாரமற்ற முறையில் கழிவறை இருப்பதும் மற்றும் தரமற்ற முறையில் உணவு இருப்பதை கண்ட அதிகாரிகள் திரையரங்க உரிமையாளரிடம் எச்சரித்து, இன்றைக்குள் இதை சரி செய்ய வேண்டும் என எச்சரித்தனர்.

இதையும் படிக்க: மீண்டும் ஒரு வேங்கைவயல்?

தேனி அருகே கண்மாயில் டன் கணக்கில்  மீன்கள் செத்து ஒதுங்கியுள்ளது. போடி மீனாட்சிபுரம் கண்மாயில் ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட டன் கணக்கில் செத்து ஒதுங்கியுள்ள மீன்களால் வெளிநாட்டுப் பறவைகள், உணவு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மீனாட்சிபுரம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கம்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை கொட்டகுடி ஆறு அணை  பிள்ளையார் அணைக்கட்டு ராஜ வாய்க்கால் மூலம் இந்த  கம்மாய்க்கு நீர்வரத்து உள்ளது. இந்த கம்மாயை நம்பி ஆயிரம் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த அளவிலான மழை பெய்ததால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து இன்றி கம்மாய்க்கு நீர்வரத்து இன்றி வரண்டு போகும் நிலையில் உள்ளது.

தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டகுடி நீரானது மீனாட்சியம்மன் கமாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர்கள் அனைத்தும் கலந்து செல்வதால் நீர் மாசடைந்து செல்கிறது. இதன் காரணமாக கம்மாயில் குறைந்த அளவு நீரில் உள்ள மீன்கள் அனைத்தும் டன் கணக்கில்  செத்து கரை ஒதுங்கி உள்ளது. இதன் காரணமாக  அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது உடன் நீர் அனைத்தும் மாசடைந்து மீன்கள் இன்றி காணப்படுகிறது. 

இந்த மீனாட்சியம்மன் கம்மாயில் பல்லாயிரம் மைல்கள் கடந்து வரும் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக இரைக்காக வந்து செல்வது வழக்கம்.  தற்போது மீன்கள் அனைத்தும் செத்து கரை ஒதுங்கியதால் கம்மாயில் மீன்கள் இன்றி வெளிநாட்டு பறவைகள் உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து வந்து உணவு கிடைக்கும் என வந்த பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் தற்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

போடி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வைத்த நிலையிலும் போடி பகுதியில் உள்ள கழிவுநீர்  வாய்க்கால் வழியாக  சுவையான நீரில் கலந்து மாசடைந்து வருவதால் கம்மாய் நீர் யாரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி உள்ளது.  மேலும் இந்த நீர் மீன்கள் கூட வசிக்க முடியாத நட்சு நீராக மாறி இருப்பது மிகுந்த வேதனை அடைய வைத்துள்ளது.  

இயற்கையாகவே கிடைக்கக்கூடிய மீன்களில் ஒன்றான ஜிலேபி கெண்டை மீன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இந்த கன்மாயில் தற்போது அனைத்தும் செத்து கரை ஓதுங்கியதால் வரும் காலங்களில் மீன்கள் இல்லாத கம்மாயாக மாறும் நிலைக்கு தற்போது மீனாட்சி அம்மன் கம்மாய் மாறி உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை செயல்பட வைத்து போடி பகுதியில் உள்ள கழிவு நீர்களை ராஜ வாய்க்காலில் கலக்காத வகையில் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்தி கொட்டகுடி ஆற்று சுவையான நீரை மாசுபட வைக்காமல் இக்காம்மாய்க்கு அனுப்பி மீன்கள் இறக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீர்வள துறையினரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் செயல்படாமல் இருப்பதே இது போன்ற நிகழ்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. நம் இயற்கை கொடுக்கக்கூடிய அற்புதமான தண்ணீரை மாசடையாமல் வைப்பதற்கு போடி பகுதி மக்களும் முன்வர வேண்டும்.

 இதையும் படிக்க  |  மகளிர் உரிமை தொகை: காரணம் தெரிந்துகொள்ளும் இணையதளம் செயல்படவில்லை!!

திருப்பத்தூா் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாாி மோதிய விபத்தில் 7 பெண்கள் உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் ஓணான்குட்டை பகுதியை சேர்ந்த 45-க்கும் மேற்பட்டோர் கடந்த 8-ம் தேதி இரண்டு பேருந்துகளில் மைசூாில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு இன்ப சுற்றுலா சென்றனர். பின்னா் அவா்கள் சுற்றுலாவை முடித்துக்கொண்டு அதே பேருந்தில் வீட்டிற்கு  திரும்பி வந்துக் கொண்டிருந்தனா்.

இந்த நிலையில் இந்த பேருந்து அதிகாலை 3 மணியளவில் சண்டியூா் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டயா் பஞ்சா் ஆகியுள்ளது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பெண்கள் சிலா் கீழே இறங்கி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவாில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனா்.

 

அப்போது அதிவேகமாக வந்த ஈச்சர் லாாி ஒன்று எதிா்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள் மீது பேருந்து சாய்ந்ததில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாிதாபமாக உயிாிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசாா் பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த சிலா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதிகாலையிலேயே நடைபெற்ற இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:மகளிர் உரிமைத் தொகை; இன்று இறுதிகட்ட ஆலோசனை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள    செண்பகத் தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான இங்கு நீர் வீழ்ச்சிகள் உள்ளதால் அதிக அளவிலான பொதுமக்களும் அருகில் உள்ள சுற்றுலா பயணிகளும் பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிகின்றனர்.

இந்த வனப் பகுதியில் ஏராளமான யானைகள் மற்றும் புலிகள், சிறுத்தைகள், கரடிகள் காட்டெருமைகள் பெரிய அளவிலான மலைப்பாம்புகள் ,ராஜ நாகங்கள் என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக அதிக அளவில் யானைகள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் மலையின் உச்சி பகுதியில் வசித்து வரும் யானை கூட்டம் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வெளிவரும். யானைகள் அடிவாரப் பகுதிகளில் சுற்றிதிரிந்து விட்டு அதிகாலை நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும். ஆனால் கடந்த இரு தினங்களாக செண்பகத் தோப்பு மலை அடிவாரத்தில் ஆறு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் ஒன்று சுற்றி தெரிகிறது. மாலை 4 மணி அளவில் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்து அடிவாரத்தில் மக்கள் சென்றுவரும் பாதையில் இந்த யானைகள் முகாம் இட்டுள்ளன. 

இதுகுறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் கார்த்திக் கூறும் போது கடந்த சில தினங்களாக யானை கூட்டம் ஒன்று செண்பகத்தோப்பு முதல் பாலத்தின் அருகே சுற்றி திரிகிறது. இது விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் ஆகியோர் அவ்வப்போது சென்று வரும் பாதையாகும். எனவே அனுமதி இன்றி யாரும் செண்பகத்தோப்பு பகுதிக்கு  செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்க வனத்துறை சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”இதை வெளியே சொல்லி விடாதீர்கள்;அது தலைக்குனிவு தான்” - ப.சிதம்பரம் ஆவேசம்

திருச்செந்தூர் அருகே பெற்ற தாயை பராமரிக்க தவறிய மகனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை மேல் முறையீட்டில் மாதம் ரூ.1000 ஆயிரம் வழங்கி உத்தரவிட்டு சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா வாழவள்ளான் பகுதியைச் சேர்ந்த மாலையம்மாள்(79) என்பவருக்கு முத்துக்குமார்(41), பாலசுப்பிரமணியன், மணிகண்டன் ஆகிய மூன்று மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் முத்துக்குமார் பெற்ற தாய் மாலையம்மாளை பராமரிக்க தவறியதாக, மாலையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமார் மாதம்தோறும் ரூ.5ஆயிரம் கொடுக்க வேண்டும் என திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.  ஆனால் முத்துக்குமார் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கொடுக்காததால் மாலையம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமாருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். 

இதனையடுத்து முத்துக்குமார் ஆகஸ்ட் 23ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் முத்துக்குமாரின் மனைவி சாந்தி(39) மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்திருந்தார்.  அந்த மேல்முறையீட்டில் கணவர் முத்துக்குமார் கூலி வேலை செய்து வந்துள்ளார்.  வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், மூன்று குழந்தைகள் இருப்பதால் கணவரின் வருமானம் குடும்பத்தை வழிநடத்த போதுமானதாக இல்லை. மேலும் மாலை அம்மாளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் மட்டும்தான் வழங்க முடியும். குடும்பம் நலம் கருதி சிறை தண்டனையில் இருந்து முத்துக்குமாரை விடுவிக்கும்படி முறையிட்டு இருந்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் முத்துக்குமார் தாய் மாலையம்மாளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிட உத்தரவிட்டு, சிறை தண்டனையில் இருந்து முத்துக்குமாரை விடுவிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து முத்துக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிக்க: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இழப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!