7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களாக பெய்து வரும் நிலையில், தற்போது 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

தற்போது வடகிழக்கு பருவமழை காரண்மாக, இரண்டு நாட்கள் தொடர்ந்து கனமழையாக பெய்து வரும் நிலையில், மழையின் தாக்கம் சிறிது குறைந்து காணப்படுகிறது. ஆனாலும், பல பகுதிகளில் தற்போது வரை மழை பெய்த படியே உள்ளது.

கடந்த மாதம் அக். 29ம் தேதி துவங்கிய மழையானது கடந்த இரண்டு நாட்களாக மோசமாகியுள்ளது என்றே சொல்லலாம். பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களில் மழை நின்ற பாடே இல்லை.

மேலும் படிக்க | குளம் போல் மாறிய குடியிருப்பு பகுதிகள்...

கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வருகிற 6ம் தேதி வரை, ஒரு சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையைப் பொறுத்த வரை தொடர்ச்சியாக வானம் மேக மூட்டமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, இன்றும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க |  மக்களுக்காக அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்... வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாரா?

கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் இடியுடம் கூடிய மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க |  வெள்ளத்தில் சூழ்ந்த நகரங்கள்... ஆரஞ்சு அலர்ட் உண்மையா?


விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் மீண்டும் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான  தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் இந்து சமய நிலைத்துறை கோயிலுக்கான பராமரிப்பு பணிகளை செய்ய முன் வராததால் கிராம மக்களே கோவிலுக்கான பராமரிப்பு மற்றும் திருவிழா  பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றபோது மேல்பாதி காலனி பகுதியை சார்ந்த பட்டியலின மக்கள் கோவிலில் உள்ளே நுழைய முயன்ற போது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்ய கூறி பட்டியலின மக்களை அனுப்பி வைத்து விட்டனர். கோவில் உள்ளே சென்று தான் சாமி தரிசனம் செய்வோம் என பட்டியலின மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 இதனை அடுத்து கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டோம் என ஊர் பொதுமக்களும் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.  தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இரண்டு தரப்பினரிடையே இரண்டு முறையும் கோட்டாட்சியர் தலைமையில் ஐந்து முறை சமாதான கூட்டங்கள் நடைபெற்றது. இதுவரை சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை மீண்டும் கோவிலுக்குள் கிராம பெண்கள் குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உரிய பராமரிப்பு இல்லாததால் பூக்கள் அழுகி நிலையில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

கோடை சீசனையொட்டி சிம்ஸ் பூங்காவில் நாளை மறுதினம் பழக் கண்காட்சி நடைபெற உள்ளதையொட்டி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் ஏராளமான மலர்கள் அழுகிய நிலையில் உள்ளன. இதனால், அரிய வகை பூக்களை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். 

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பராமரிப்பு இல்லாமல் பூக்கள் அழுகி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

 

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை மறுதினம் நடைபெற உள்ள பழக்கண்காட்சிக்கு  2 லட்சத்திற்கு மேற்பட்ட மலர்  செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன . இவைகள் சரியான பாரமறிப்பு  இல்லாமல் கால நிலை மாற்றத்தாலும்  பூக்கள் அழுகி காணப்படுகிறது. 

இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அரிய வகை பூக்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். தற்போது கால நிலை மாற்றதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்படுகிறது.

இதையும் படிக்க    | நடிகர் விஜய்சேதுபதி மீது கதை திருட்டு புகார்...!

துறையூர் அம்மா உணவகத்திற்கு குப்பை வண்டியில் அரிசி மூட்டைகள் வந்திறங்கியதை பார்த்த மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை என இரு வேளைகளில் பணியாளர்கள் சுமார் 12 பேர் சமையல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகின்றனர். 

மேலும் அம்மா உணவகத்தில் காலை, மதியம் என இரண்டு வேளைகளில் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படும் நிலையில், நேற்று மதியம் துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மினி லாரியில் அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாமர மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவுக்குண்டான அரிசியை  சுத்தம் செய்யப்படாத குப்பை லாரியில், எடுத்துவந்த இந்த நிகழ்வு பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் பொது மக்களை முகம் சுளிக்கும் வண்ணம் அமைந்தது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது  துறையூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளரின் நேரடிப் பார்வையில் உள்ள அம்மா உணவகத்தில் தரம் , சுகாதாரம் உள்ளிட்டவற்றை தினந்தோறும் ஆய்வு செய்து, சுத்தமான உணவை வழங்கிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இதையும் படிக்க:"பாலியல் தொழில் குற்றமில்லை" நீதி மன்றம் அதிரடி!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதிக்கு உட்பட்ட அதியமான் தெருவில் மறைமலைநகர் நகராட்சி ஊழியர்கள் சார்பில் தூய்மை பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது நீண்ட நேரமாக குழந்தையின் அழுகை குரல் கேட்டபடி இருந்துள்ளது.  இதனையடுத்து அழுகை குரல் கேட்ட திசையில் இருந்த வீட்டின் அருகே சென்று பார்த்தபோது மதில் சுவர் ஓரம் குப்பையில் உட்புறமாக பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி ஈரம் கூட காயாமல் இருந்துள்ளது.

இதனைக் கண்ட துப்புரவு ஊழியர்கள் குழந்தையை பத்திரமாக
மீட்டு மறைமலைநகர் நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்ததோடு
மறைமலைநகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறைமலைநகரில் இயங்கி வரும் அரசு சுகாதார நிலையத்திற்கு அந்த குழந்தையை கொண்டு சென்றனர்.  அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.  குப்பையில் குழந்தை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  இந்த 21 அம்சங்கள் சரியாக உள்ளதா.... சரியாக இல்லையெனில் திரும்ப அனுப்பப்படும் வாகனங்கள்...!!

குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்யவிட்டால் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படாது என வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட 31 பள்ளிகளைச் சேர்ந்த 369 கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  வரும் 31.5.2023 வரை இந்த வாகன சோதனை நடைபெற உள்ளது.   இதில்அரசின்அறிவுறுத்தல்படி 21 அம்சங்கள் சரியாக உள்ளதா என்பது ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சரியாக பணிகள் செய்யாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு ஒரு வார காலத்திற்குள் சரிசெய்து கொண்டு வந்து காண்பித்த பிறகுதான் வாகனங்களை இயக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அவசரகால வழி வண்டியின் நடைமேடை படிக்கட்டு முன்பக்க கேமரா பின்பக்க கேமரா உள்ளிருக்கும் கேமரா அவை மானிட்டரில் தெரிகிறதா பின்பக்கம் வண்டியை எடுக்கும்போது சென்சார் இயங்குகிறதா அதுகுறித்து அறிவிப்பு டிரைவருக்கு கிடைக்கிறதா தீயணைப்பு கருவிகள் முதலுதவி மருந்துகள் வண்டிகளில் உள்ளதா தீயணைப்பு கருவிகள் ஓட்டுனர்களால் இயக்கப்படமுடியுமா என்பது உள்ளிட்ட 21 அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது. 

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாமாபிரியா ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.  இந்த ஆய்வு பணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா கூறியதாவது பள்ளிகளுக்குச் செல்லும் சிறிய குழந்தைகள் பாதுகாப்பாக வாகனங்களில் பயணம் செய்ய ஏதுவாக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து அதனை ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கும் போது ஆய்வு செய்ய உத்தரவிட்டது எனவும்  அதன்படி வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் திருச்செங்கோடு வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட வாகனங்களை சோதனை செய்யும் பணி நடந்தது எனவும் இதில் 23 வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்து கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  தமிழகத்தில் முதல் முறையாக மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிக்கும் பெண் காவலர்கள்..!!