“ஐயா... என் ரோட்-டை காணும்” - வடிவேலு பட பாணியில் காணாமல் போன சாலை...

எது வேண்டுமானாலும் காணாமல் போகலாம். ஆனால், இங்கு ஒரு சாலையே காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஐயா... என் ரோட்-டை காணும்” - வடிவேலு பட பாணியில் காணாமல் போன சாலை...

புதுக்கோட்டை | ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சியில் 9வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது. இந்த கிராம சாலை மிகச்சரியாக கீரமங்கலம் மற்றும் செரியலூர் இனாம் ஊராட்சிகளின் எல்லையில் செல்கிறது.

மேலும் படிக்க | ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டுப்போன நகைகள்....!!

இந்த சாலையில் 400மீ நீளம், 8.5மீ அகலம் இருக்க வேண்டிய சாலையை தனிநபர்கள் ஆக்கிரமித்தது போக 5மீ அகலம் தான் சாலை இருப்பதாகவும், மீதமிருக்கும் 3.5மீ சாலையை மீட்டுத்தரக் கோரியும், பல நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

மேலும் படிக்க | சென்னை சைதாப்பேட்டை சுரங்கபாதைக்குள் மழை பெய்கிறதா?

இதனை அடுத்து, கீரமங்கலம் பேரூராட்சியின் 9வது வார்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, குறிப்பிட்ட சாலையைக் காணவில்லை எனவும், உடனடியாக அந்த சாலையைக் கண்டுபிடித்துத் தருமாறும் புகார் மனு ஒன்றை கீரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.

வடிவேலுவின் கிணற்றைக் காணவில்லை என்ற திரைப்பட நகைச்சுவை பாணியில் சாலையைக் காணவில்லை எனக் கூறி புகாரளித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்கள்...