தனி மனிதனாகிய நான் ஒரு லட்சத்து 6 ஆயிரம் மரங்கள் நட்டுள்ளேன்- அமைச்சர் மா.சு பெருமிதம்

ஒரு நாட்டின் பசுமை தரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும் ஆனால் நம்மிடம் 23.7% மட்டுமே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர்

தனி மனிதனாகிய நான் ஒரு லட்சத்து 6 ஆயிரம் மரங்கள்  நட்டுள்ளேன்- அமைச்சர் மா.சு பெருமிதம்

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை முகேஷ் கண்ணன் தலைமையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளில் 4500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஏழு வகையான பூப்பூக்கும் தாவரங்களைக் கொண்ட 4500 மரக்கன்றுகளை நடும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் துவக்கி வைக்க, அவரை தொடர்ந்து மாணவர்களும் கல்லூரி வளாகத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மா சுப்பிரமணியன், மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைக்க  என்னை அழைத்தனர், ஆனால் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து மரக்கன்று நடும் நிகழ்வாக இருக்கும் என்று எனக்கு தெரியாது. யார் எதிர்காலத்தில் மரங்களை பாதுகாக்க வேண்டுமோ, அவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பது பெருமையாக இருக்கிறது.

ஒரு நாட்டின் பசுமை தரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும் ஆனால் நம்மிடம் 23.7% மட்டுமே உள்ளது. எனவே, 9.3% கூடுதலாக  மரம் நட வேண்டும், அதற்கு 260 கோடி மரங்கள்  இருக்க வேண்டும். அதற்காக முன்னரே திமுக அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 10 ஆண்டுகளில் 260 கோடி மரங்களை நடுவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்துள்ளார்.

மேலும் படிக்க: நீதிபதிகள் நியமனத்திலும் தலையிடுகிறதா மத்திய அரசு?!! என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்..!

இந்த திட்டத்தினை தமிழ்நாடு அரசு கையில் எடுத்திருந்தாலும் கூட இது அரசினால் மட்டுமே சாத்தியப்படாது. ஒவ்வொரு பொது மக்களும் இதனை கையில் எடுத்து எதிர்காலத்தில் நமக்கு வாழ்வு அளித்து கொண்டிருக்கக் கூடிய மண்ணை மலடாக்காமல் பாதுகாப்பது என்பது நம்முடைய கடமை, எனவே ஆளுக்கு ஒரு மரங்களை நட வேண்டும்.

மா.சுப்ரமணியன் என்கிற தனி மனிதனாகிய நான் ஒரு லட்சத்து 6 ஆயிரம் மரங்கள்  நட்டுள்ளேன். நேரம் காலம் இல்லாத ஒரு துறை வழக்கறிஞர் துறை இதை படிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் என்று தனது உரையை முடித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.