அனல் மின் நிலையத்தின் கொதிகலன் பழுது...! மீண்டும் தொடங்கிய மின் உற்பத்தி..!

அனல் மின் நிலையத்தின் கொதிகலன் பழுது...! மீண்டும் தொடங்கிய மின் உற்பத்தி..!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள 1-வது நிலையின் 3-வது அலகில் நேற்று முன்தினம் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “ செல்லாத நாணயமான பிஜேபியும், செல்லாத ரூபாய் நோட்டுகளான அதிமுகவும்...” திண்டுக்கல்.ஐ.லியோனி பேச்சு