பொன்னேரியில் கிரிக்கெட் டோர்னமெண்ட்... கணேஷ்குமார் பங்கேற்பு...

பிரபல தனியார் மருத்துவக்குழுமம் சார்பில் கார்பரேட் கிரிக்கெட் டோர்னமெண்டை, தமிழக கிரிக்கெட் வீரர் கணேஷ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தார்.

பொன்னேரியில் கிரிக்கெட் டோர்னமெண்ட்... கணேஷ்குமார் பங்கேற்பு...

திருவள்ளூர் | பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் தனியார் கல்லூரியில் 36 அணிகள் பங்கேற்கும் கார்பரேட் கிரிக்கெட் டோர்ணமென்ட் இன்று துவங்கியது.

சென்னையில் இயங்கும் பிரபல தனியார் மருத்துவ குழுமம் சார்பில் நடைபெறும் இத்தொடரை, தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் கணேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தொடரின் பரிசுக்கோப்பைகளை அறிமுகப்படுத்தி வீரர்களுக்கு சீருடையை வழங்கினார்.

மேலும் படிக்க | பரப்பரப்பான கடைசி நிமிடங்கள்......கிராஸ் ஓவர் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா....

விழாவில் அவர் பேசுகையில் தனது சிறுவயதில் டென்னிஸ் பந்தில்தான் கிரிக்கெட் விளையாட்டை துவக்கியதாக குறிப்பிட்டவர் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணியினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து பூவா தலையா போட்டு தொடரின் முதல் ஆட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். முதல் ஆட்டத்தில் எஸ்.ஆர்.எப் அணியும் டி.டி.எல் அணியும் மோதியது. முதலில் ஆடிய எஸ்.ஆர்.எப் அணி நிர்ணயிக்கப்பட்ட எட்டு ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய டி.டி.எல் அணி 8 ஓவரில் 82 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எஸ்.ஆர்.எப் அணி 41 ரன் வித்தியாசத்தில் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் ராஜேஷ் 29 பந்துகளில் 88 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

மேலும் படிக்க | ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு... கோலி, சிராஜ் முன்னேற்றம்...