பட்டாசு ஆலையில் வெடி விபத்து...! 2 அறைகள் தரைமட்டம்...!!

பட்டாசு ஆலையில் வெடி விபத்து...! 2 அறைகள் தரைமட்டம்...!!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள முக்கூட்டு மலையில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இரவில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 அறைகள் தரைமட்டமானது. இரவு நேரத்தில் பணியாளர்கள் இல்லை என்பதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் கோவில்பட்டி அருகேயுள்ள முக்கூட்டுமலை கிராமத்தில் ஜெயா பயர் ஓர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். புதன் கிழமை வழக்கம் போல பணிகள் முடிந்ததும் தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் புதன்கிழமை இரவில் திடீரென பட்டாசு ஆலையில் இருந்து பயங்கர சத்ததுடன் பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளது. ஆலையில் 2 அறையில் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 2 அறைகளும் தரைமட்டமனது.  


மேலும் தொடர்ந்து பட்டாசுகள் பலத்த சத்தததுடன் வெடித்து கொண்டு இருந்தன.இதனை பார்த்த அருகில் இருந்த மக்கள் கழுகுமலை காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டு இருப்பதை அணைத்தனர். இரவு நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லை என்பதால் உயிர் சேதம் எதுவும் இல்லமால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com