ரூ.1 லட்சம் மதிப்பிலான கள்ள சாராய பொட்டலங்கள் பறிமுதல்.!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் காவல் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான கள்ள சாராய பொட்டலங்கள் தீ வைத்து எரிப்பு.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, நாயனூர், ஒட்டம்பட்டு, அருணாபுரம், வசந்தகிருஷ்ணாபுரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கள்ளத்தனமாக விற்று வந்த சாராய பொட்டலங்களை அரகண்டநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சாராயம் விற்று வந்த நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராயப் பொட்டலங்களை தீவைத்து எரித்தனர்.

இதையும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு; குடியரசுத் துணைத் தலைவர் ஒப்புதல்..!