பஞ்சு மூட்டை ஏற்றிச் சென்ற லாரியில் தீ...!  போராடி அணைத்த தீயணைப்பு படையினர்...!!

பஞ்சு மூட்டை ஏற்றிச் சென்ற லாரியில் தீ...!  போராடி அணைத்த தீயணைப்பு படையினர்...!!
Published on
Updated on
1 min read

கூடுவாஞ்சேரி அருகே பஞ்சு மூட்டை ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்துள்ளனர். 

சென்னை மணலியில் இருந்து புதுக்கோட்டைக்கு பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை ஓட்டுநர் முத்தமிழ் செல்வன் இயக்கி உள்ளார். அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரியை அடுத்த சீனிவாசபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்கத்தில் புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் வாகனத்தை நடு ரோட்டிலேயே நிறுத்தியுள்ளார். அதற்குள்ளாகவே தீ மளமளவென பரவியதால்,  மறைமலை நகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் லாரியின் பெரும் பகுதி எரிந்து வெறும் எலும்புக்கூடாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com