அரசு பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா...! மதுபானக்கடையை அகற்ற கோரி போராட்டம்...!

அரசு பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா...! மதுபானக்கடையை அகற்ற கோரி போராட்டம்...!

தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி அருகே அரசு பொறியல் கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று இரவு கல்லூரியை முடித்து விடுதிக்கு சென்ற மாணவர்களை குடிபோதையில் இருந்த மர்ம நபர்கள் மாணவர்களை தாக்கி அதில் ஒரு மாணவனை அடித்து முட்புதரில் வீசி சென்று விட்டதாகவும் தற்போது அந்த மாணவன் மேல் சிகிச்சைக்காக கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அரசு பொறியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும் தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி, தெருவிளக்கு அமைத்து தரக் கோரியும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த காவல்துறையினர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தாக்கிய மர்ம நபர்களை கைது செய்வதாகவும் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கும் தங்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாகவும் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மேலச்சக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கண்ணன் டாஸ்மாக் மதுபான கடை அகற்றுவதற்கு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான புகார் மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளதாகவும் விடுதிக்கு செல்லும் பகுதிகளுக்கு தெருவிளக்கு அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க : 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தவில்லை என்றால்...ஏலத்தில் விடப்படும்...போலீசார் எச்சரிக்கை!