நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்...

நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்...

ஜெடையலிங்கா சுவாமி கோவிலில் திருவிழாைவயொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

நீலகிரி | கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் படகர் இன மக்களின்  ஜடையலிங்க சுவாமி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டன. திருவிழாவானது  ஜக்கனாரை, அரவேணு, கேசலாட, பங்களாடா ,கல்லாட கிராமத்திற்கு சாமி ஊர்வலம் சென்று வந்தன.

திருவிழாவின் இறுதி நாளான இன்று பூ குண்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பூகுண்டம் இறங்கினார்கள் திருவிழாவில் இருளர்கள் மக்கள் பாரம்பரிய இசைக் கருவியுடன் தீ மிதித்தனர். இத்திருவிழாவை காண சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து  திரளனோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com