மதுபானமா...? கெமிக்கலா...? பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு...!

மதுபானமா...? கெமிக்கலா...? பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு...!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள வீரசோழபுரத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர் மதுபானம் என நினைத்து கெமிக்கலை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள வீரசோழபுரத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த மதுரை திருநகரை  சேர்ந்த சிவமுருகன் (50), மதுரை நிலையூரை சேர்ந்த  ரவி(60) ஆகிய இருவரும் நேற்று இரவு மது அருந்தி உள்ளனர். அந்த மது போதையில் அருகில் இருந்த கெமிக்கலை மதுபானம் என நினைத்து குடித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் வயிறு வலை ஏற்பட்டு, அதன் காரணமாக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.