மர்ம நபர்களால் கடத்தப்பட்ட குழந்தை... மரக்காணத்தில் பதற்றம்...

பள்ளி மாணவன் மர்ம நபர்களால் கடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம நபர்களால் கடத்தப்பட்ட குழந்தை... மரக்காணத்தில் பதற்றம்...

விழுப்புரம் | மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்டது அழகன்குப்பம். மீனவர் பகுதி  இப்பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் வயசு (32) இவரது மகன் டிஜேஸ், வயது (7). இவர் அப்பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நவநீதகிருஷ்ணன் தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு வந்துள்ளார். மீண்டும் மாலை பள்ளி விட்டவுடன் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வர பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் தனது மகன் காணவில்லை.

இதனால் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி விசாரித்தும் பார்த்துள்ளனர். ஆனால், அவரது மகன் காணவில்லை. இதனால் தனது மகனை கடத்திச்சென்று விட்டார்கள் என்று நவநீதகிருஷ்ணன் மரக்காணம் காவல்நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | எதிரி நாட்டு நாடகங்களை எப்படி பார்க்கலாம்..! பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை..!

இந்த புகாரின் மீது மர்ம நபர்களால் கடத்தப்பட்ட மாணவனைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நவநீதகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி சுஷ்மிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்தும் முடிந்துள்ளது.

இதனால் மாணவனை அவரது தாய் சுஷ்மிதாவின் உறவினர்கள் யாராவது இட்டுச்சென்று இருப்பார்களா? என்ற கோணத்திலும் மரக்காணம் போலீசார் முதல்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர்.

பள்ளி மாணவன் மர்ம நபர்களால் பள்ளி வளாகத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை...! அதிரடி உத்தரவிட்ட பார் கவுன்சில்...!