வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து கனமழை பொழிந்து வருவதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல்
சீர்காழி தாலுக்கா பகுதியில் கடந்த 11ஆம் தேதி இடியுடன் கூடிய அதி கனமழை பெய்தது. இந்த மழையால் வீடுகள் மற்றும் விளை நிலங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக சீர்காழி கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சீர்காழியில் 44 சென்டிமீட்டர், கொள்ளிடத்தில் 32 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.