மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்கா வனப்பகுதிகளில் தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
காலை 6:00 மணி முதல் 11மணி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என 33 குழுக்களாக பிரிந்து நேர்கோட்டு பாதையில் ( TRANSECT LINE) நீரோடிகளில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
தரைவாழ் பறவைகளுக்கு முதன்முறையாக நடைபெறும் இந்த கணக்கெடுப்பின்படி எத்தனை வகையான தரைவாழ் பறவைகள் வாழ்கின்றன என்பதை குறித்து ஆய்வு அறிக்கை தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...