சிக்னல் கிடைக்காமல் தண்டவாளத்தில் நின்ற ரயில்...! ரயிலுக்கு அடியில் புகுந்து சென்ற மாணவர்கள்...!

சிக்னல் கிடைக்காமல் தண்டவாளத்தில் நின்ற ரயில்...! ரயிலுக்கு அடியில் புகுந்து சென்ற மாணவர்கள்...!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை வந்த பனாரஸ் விரைவு ரயில் திடீரென சிக்னல் பிரச்சனை காரணமாக மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. வெகு நேரமானதால் காத்திருக்க முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல்  ரயிலுக்கு அடியில் நுழைந்து ஆபத்தான வகையில் கடந்து சென்றனர். இந்த சம்பவம் பார்ப்போரை கலக்கத்தில் ஆழ்த்தியது.