கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று பேர் பலி...! வாரிசுக்கு அரசு வேலை ஆணை...!

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று பேர் பலி...! வாரிசுக்கு அரசு வேலை ஆணை...!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கும் சத்தியம் கிரான்ட் தனியார் கேளிக்கை விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விடுதியின்  பின்புறத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்சிபட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன் குமார் (28), திருமலை(22) ஆகியோர் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியாகினர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலாளர் பழனி, ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் கேளிக்கை விடுதியில் உரிமையாளர் சத்தியமூர்த்தி தலைமறைவாக உள்ள நிலையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய துணை தலைவர் அருண் ஹோண்டர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் கழிவுநீர் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார், பின் உயிரிழந்த குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் உயிரிழந்தவர்களுக்கு நிறுவனம் சார்பாக இழப்பீடாக 15 லட்சம், தமிழக ஆதிதிராவிட நல வாரியம் சார்பாக 12 லட்சம் என தலா 27 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஆல்டர் 3 குடும்பங்களுக்கும் தலா 16 லட்சம் காசோலை வழங்கினார். மேலும் ஒரு குடும்பத்திற்கு வரிசுதாரருக்கு அரசு வேலை ஆணையை வழங்கினார். மேலும், ஒருவாரத்தில் மீதமுள்ள 2 குடும்ப வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும். இதில் மீதம் உள்ள 6 தமிழக அரசு ஆதிதிராவிடர் நலவாரியம் மூலம் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, இதுபோன்று விபத்து தொடர்ந்து நடைபெற்று வருவதால் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின் சார்பில் இலவச டோல் ஃப்ரீ எண் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com