ஒரே சேலையில் இருவர் தற்கொலை...! கள்ளகாதலால் நடந்த விபரீதம்..!

ஒரே சேலையில் இருவர் தற்கொலை...! கள்ளகாதலால் நடந்த விபரீதம்..!

கடலூர் அடுத்த பில்லாலி தொட்டி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். இதேபோல் பல்லவராய நத்தம் பகுதியை சேர்ந்தவர் வனிதா. கட்டிட தொழிலாளியான இவரின் கணவர் சேகர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் ராமதாஸ் மற்றும் வனிதா ஆகிய இருவருக்கும் கட்டிடப் பணியின் போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமதாஸ் கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியில் தற்காலிகமாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் கள்ளத்தொடர்பு குறித்து வனிதாவின் மகன்களுக்கு தெரியவந்து அதனை அவர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த இருவரும் கூத்தப்பாக்கம் பகுதியில் ராமதாஸ் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் தலைமையிலான  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கள்ளக்காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.