சொர்கத்திலும் சேர்ந்தே இருப்போம்...! மனைவி இறந்த சோகம்...! தற்கொலை செய்துகொண்ட கணவர்..!

சொர்கத்திலும் சேர்ந்தே இருப்போம்...! மனைவி இறந்த சோகம்...! தற்கொலை செய்துகொண்ட கணவர்..!

சென்னை அயனாவரம் மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தம்புசாமி (53). பிளம்பிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவானி(47). இவர்களுக்கு யுவஸ்ரீ(22) எண்ட்ர மகல் உள்ளார்.  இந்நிலையில் நேற்று பவானி, மேட்டு தெருவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தனது உறவினருடன் சென்றார். அங்கு பிரியாணி சாப்பிட்டு, பின்னர் வீட்டிற்கு உறவினருடன் வந்தபோது திடீரென பவானிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடனடியாக உறவினர் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,  வரும் வழியிலேயே பவானி உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து பவானியின் கணவர் தம்புசாமி, அவரது மகள் யுவஸ்ரீ ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து இறந்த பவானியின் உடலை கண்டு கதறி அழுதனர். 

அதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த தம்புசாமி காணாமல் போனதால், அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பவானியின் உடலை மீட்டு வீட்டிற்கு எடுத்து வந்தபோது, வீட்டின் சமையல் அறையில் தம்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  பின்னர் இதுகுறித்து தகவலறிந்த அயனாவரம் போலீசார் தம்புசாமியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க : எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தேவையில்லை...முதலமைச்சரின் நெத்தியடி பதில்!