படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்...! விழிப்புணர்வு நடை பேரணி...!

படுகர் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபயண பேரணி
படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்...! விழிப்புணர்வு நடை பேரணி...!
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் படுகர் இன மக்கள், தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.எனவே படுகர் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி 'நம்ம நீலகிரி நம்ம தேசம்' அமைப்பின் சார்பில் கோத்தகிரி பேரகணியிலிருந்து நடைபயணம் துவங்கியது.

இந்த நடை பயணத்தை முன்னாள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சென்னமல்லன் தலைமை வகித்தார். பேரகணி பகுதியின் ஊர் நிர்வாகிகள் மணி, ராமன், பெள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  நடைப்பயணக்குழு   சுந்தரமூர்த்தி,மஞ்சை.வி.மோகன், பேட்லாட சந்திரன் ஆகியோர் நடைபயணத்தின் போது சுற்று வட்டாரத்தில் உள்ள படுகர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நடைபயண நிகழ்ச்சியில் பேரகணி பகுதி கிராம மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com