பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

ஒருபக்கம் உரத் தட்டுப்பாடு, ரசாயன உர விலை உயர்வு இருப்பதாகவும், மறுபக்கம் ரசாயன உரத்துடன் மற்ற பொருட்களையும் வாங்க கட்டயப்படுத்தி வருவதாகவும், தற்பொழுது தினமும் பயிர்களை பாதுகாக்க 20 ஆயிரம் செலவு செய்து வருவதாக விவசாயிக்ள வேதனையுடன் கூறுகின்றனர்.

பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் ராபி பருவத்திற்கான விவசாய பணிகளை கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். உளுந்து,பாசி, மக்காச்சோளம், மிளாகாய், பருத்தி, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். 

செடிகள் கருகும் நிலை 

மேலும் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்க உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தும் தெளித்துள்ளனர். பயிர்கள் வளர்ந்து வரக்கூடிய நிலையில் போதிய மழை இல்லை என்பதால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில இடங்களில் விதைகள் முளைக்கமால் கருகி போன நிலையும் ஏற்பட்டு மீண்டும் விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்யும் என்று விவசாயிகள் காத்திருந்த நிலையில் சீராக மழை பெய்யமால் பெயரளவிற்கு மழை பெய்த காரணத்தினால் செடிகள் முளைப்புதிறன் குறைந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதும் கோவில்பட்டி பகுதியில் மழை எதிர்பார்த்த அளவு இல்லை. இதானல் கருகி வரும் பயிர்களை பாதுகாக்க வேறு வழியல்லமால் விவசாயிகள் டிராக்டர் மூலமாக தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு ஊற்றி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் அதுவரை பயிர்கள் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விவசாயிகள் விலைக்கு தண்ணீர் கொடுத்து பயிர்களுக்கு ஊற்றி வருகின்றனர். ஏற்கனவே விதை, உரம் விலை உயர்வு, உரத்தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வரும் நிலையில் போதிய மழையின்மை காரணமாக பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். ஒரு டிராக்டர் 200 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி அதனை பயிர்களில் ஊற்ற 10 பேர் வரை வேலைக்கு வரவைத்து ஊற்றி வருகின்றனர். 

விவசாயத் தொழிலாளர்கள் கவலை

கடந்த ஆண்டு பரவலாக மழை தொடக்கத்தில் பெய்த காரணத்தினால் இந்தாண்டும் நல்ல மழை இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாய பணிகளை தொடங்கியதாகவும், ஆனால் மழை எதிர்பார்த்து அளவு இல்லை என்பதால் விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி வருவதாகவும் கூறுகின்றனர். ஒருபக்கம் உரத் தட்டுப்பாடு, உர விலை உயர்வு இருப்பதாகவும், மறுபக்கம் உரத்துடன் மற்ற பொருள்களையும் வாங்க கட்டயப்படுத்தி வருவதாகவும், தற்பொழுது தினமும் பயிர்களை பாதுகாக்க 20 ஆயிரம் செலவு செய்து வருவதாக விவசாயிக்ள வேதனையுடன் கூறுகின்றனர்.

நூறு நாள் வேலையும் சரிவர கிடைக்கவில்லை, போதிய மழை இல்லை என்பதால் விவசாய பணிகளும் சரிவர நடவடிக்கைவில்லை என்றும், இதனால் குறைவான ஊதியம் தான் கிடைப்பதாகவும், இன்றைக்கு அனைத்து விலைவாசியும் உயர்ந்த நிலையில் தங்களுடைய வாழ்வாதரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விதைத்தவர்களுக்கும் லாபம், விவசாய பணிகளை நம்பி இருக்கும் எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு வருமான இல்லை என்று விவசாய தொழிலாளர்கள் கூறுகின்றனர். எதிர்பார்த்த மழை இல்லை என்பதால் விவசாயிகள் பயிர்களைக் காக்கப் போராடி வருகின்றனர்.