ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...! பல்வேறு கட்சியினர் கைது...!!

ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...! பல்வேறு கட்சியினர் கைது...!!

இராமநாதபுரத்தில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாநில ஆளுநர் ஆ.என்.ரவி இன்று காலை இராமநாதபுரம் வந்துள்ளார். இந்நிலையில் ஆளுநர் ராமநாதபுரத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படதாக விமர்சித்த அவர்கள்  ஆளுநரை திரும்பப் போகச் சொல்லி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய பல்வேறு கட்சியினரை  காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.