காணாமல் போன இரண்டு மோதிரங்கள்... கண்டுபிடித்து கையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்...

திருவான்மியூரில் 1.80 லட்சம் மதிப்பிலான ஒரு தங்கம் மற்றும் ஒரு வைர மோதிரத்தை தொலைத்த பெண்மணிக்கு தூய்மை பணியாளர்கள் மீட்டுக் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

காணாமல் போன இரண்டு மோதிரங்கள்... கண்டுபிடித்து கையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்...

சென்னை : திருவான்மியூரில்  1.80 லட்சம் மதிப்பிலான ஒரு தங்கம் மற்றும் ஒரு வைர மோதிரத்தை பெண்மணி தொலைத்தார். அந்த பெண்மணியுடன் சேர்ந்து தொலைத்த மோதிரங்களை தூய்மை பணியாளர்கள் தேடி கண்டுபிடித்து கொடுத்தனர்.

மேலும் படிக்க | நாட்டுல நிஜமாவே ஜென்டில்மேன் கிச்சாக்கள் இருக்காங்க பா... தி ரியல் லைஃப் ஆக்சன் கிங்

திருவான்மியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பெண்மணி தன்னுடைய வைரம் மற்றும் தங்க மோதிரத்தை தொலைத்து தேடி வந்த நிலையில் அவருடன் இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்  1.80 லட்சம் மதிப்பிலான  மோதிரங்களை கண்டறிந்து கொடுத்துள்ளனர்.

மோதிரத்தை தவறவிட்டவரின் பெயர் பிரியா என்றும், கண்டறிந்து கொடுத்த தூய்மை பணியாளர்களின் பெயர் மணிகண்டன் மற்றும் சக்திவேல் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | சொர்கத்திலும் சேர்ந்தே இருப்போம்...! மனைவி இறந்த சோகம்...! தற்கொலை செய்துகொண்ட கணவர்..!