41ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா கொண்டாடிய கிராமம்...

பெரிய கசநாயக்கன்பட்டி கிராமத்தில் 41 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

41ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா கொண்டாடிய கிராமம்...

திருப்பத்தூர் | திருப்பத்தூர் தாலுக்கா பெரிய கச்சிநாயக்கன்பட்டி கிராமத்தில் 41 ஆம் ஆண்டு மாபெரும் எழுதுவிடும் திருவிழா ஊர் கவுண்டர் பூபதி கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவிந்தராஜ் நடராஜன் ஒன்றிய செயலாளர் ஆகியோர் தலைமையிலும் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி பூபதி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சுரேஷ் துணைத் தலைவர் இசைவாணி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

மேலும் படிக்க | ஆடம்பர திருவிழாவாக இல்லாவிட்டாலும்...மரபுகளை நினைவூட்ட வேண்டும்...திருச்சி சிவா பேச்சு!

இதனை தொடர்ந்து விழா தொடங்குவதற்கு முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் எழுதுகள் ஓடும் பாதை மற்றும் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்பு துவங்கப்பட்ட இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 150 காளைகள் கலந்து கொண்டன.

மேலும் படிக்க | பழனி தைப்பூசம்.... குவியும் பக்தர்கள்....

மேலும் குறிப்பிட்ட தூரத்தை குறுகிய நொடிகளில் கடந்த காளைக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் தொடர்ந்து கடைசி பரிசாக ஆறுதல் பரிசு உட்பட 41 பரிசுகளும் வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த எருது விடும் திருவிழா மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது...யாருக்கும் உரிமை இல்லை...கனிமொழி பேச்சு!