மகாத்மாகாந்தி 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையில் ஊதியம் அளிக்கும் முறை செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஒரேமாதிரியாக ஊதியம் வழங்கும் நடவடிக்கையின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைக்க, பயனாளிகளுக்கு 4 முறை நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதன்படி இதுவரை 90 சதவீத தொழிலாளர்களின் ஆதாருடன் ஊதியத் தகவல்கள் இணைக்கப்பட்டதாகவும், 31ம் தேதிக்கு மேல் காலக்கெடுவை நீட்டிக்கப் போவதில்லை எனவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.