கலை, அறிவியல் கல்லூரி: "விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்"!

கலை, அறிவியல் கல்லூரி: "விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்"!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. இதற்கு முன்னதாகவே தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செயல்படுத்த துவங்கிவிட்டன. கடந்த 5ம் தேதி முதல் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவும் தொடங்கி விட்ட நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரங்கள் கடந்த 6ம் தேதி வெளியானது.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ம் தேதி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் http://www.tngasa. in/  எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தொடர்ந்து மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் எனவும்  அதன்பின், மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரிகள் அளவில்) மே 25 முதல் 29ம் தேதி வரை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:"ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்த உத்தரவிட்டது ஓ.பி.எஸ்.தான்" உண்மையை போட்டுடைத்த ஜெயக்குமார்..!