பாண்டிச்சேரி டிரிப் போதும்.. கொஞ்சம் ஜெயிலுக்கு வாங்க..!

பாண்டிச்சேரி டிரிப் போதும்.. கொஞ்சம் ஜெயிலுக்கு வாங்க..!

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு வரும் 26-ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சர்ச்சை பேசிய ஸ்டண்ட் மாஸ்டர்:

சென்னை மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி, இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்கும் நாளே, இந்துக்களின் எழுச்சி நாள் என்றார். இது குறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

தலைமறைவான கனல் கண்ணன்:

கனல் கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தேடுவதை அறிந்து கனல் கண்ணன் தலைமறைவானார்.  இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, கனல்கண்ணன் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கைதான கனல் கண்ணன்:

இந்நிலையில், தலைமறைவான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் புதுச்சேரிக்கு  அவரை தேடி சென்றனர். இதனையடுத்து, 76 வது சுதந்திர தினவிழாவையொட்டி இன்று புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல்கண்ணனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜார்:

இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி, வரும் 26-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் புழல் சிறைக்கு கொண்டு சென்ற போது,  கனல் கண்ணன் ஆதரவாளர்கள் வாகனத்தை வழி மறித்து முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், ஜாமீன் கேட்டு  மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் நாளை மனு விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.


அமீர் - ஞானவேல் ராஜா விவகாராம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கரு.பழனியப்பன், சிவக்குமார், ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே, இயக்குனர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. 2007 ல் வெளியான ’பருத்தி வீரன்’ வெளியாகி 16 வருடம் ஆகியும் தொடரும் இந்த பிரச்சனை திடீரென தற்போது பெரிய அளவில் பேசப்படுவதற்கு காரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ”கார்த்தி 25” விழா தான். கார்த்தியின் நடிப்பு திறமையை மக்களிடம் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் இயக்குனர் அமீர். ஆனால், ”கார்த்தி 25” நிகழ்ச்சியில் கார்த்தி பணியாற்றிய அனைத்து இயக்குனர்களும் வருகை தந்திருந்த நிலையில், அமீர் பங்கேற்கவில்லை.

அதன்பிறகு, இயக்குனர் அமீரிடம் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து கேட்ட போது, எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து, பருத்தி வீரன் தொடர்பாக சமீபத்தில் ஞானவேல் கூறிய கருத்துக்களும் இந்த சர்ச்சைக்கு மிக முக்கிய காரணம்.

தயாரிப்பாளர் ஞானவேல் பேசியிருந்த கருத்துக்கள் வைரலான நிலையில், அவருக்கு எதிராக நடிகர் சசிகுமார், நடிகர் சமுத்திரகனி, நடிகர் பொன்வண்ணன், இயக்குனர் சுதா கொங்குரா, கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான சினேகன் என அடுத்தடுத்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க : ”முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அந்த வகையில் தற்போது இயக்குனர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிரான தனது கண்டனங்களை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொடுவதற்கு ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அமீரின் பருத்தி வீரன் அமீரின் பருத்தி வீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்” என்று தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மேலும், “நூறு குறள்கள் படித்த சிவக்குமார் “அல்லற்பட்டி ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற குறளையும் படித்து இருப்பார்; அதனால், சிவக்குமார் ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் என்றும், அதனை சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புவதாகவும் தனது அறிக்கையில் இயக்குனர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.

அமீர் - ஞானவேல் விவகாரத்தில் தொடர்ந்து இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பல்வேறு குரல்கள் எழுந்து வரும் நிலையில், அந்த படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்தியோ, நடிகர் சூர்யாவோ, நடிகர் சிவகுமாரோ இதுவரை எந்தவித கருத்துகளும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்தி வீரன் படம் தொடர்பாகவும் இயக்குநர் அமீர் பற்றியும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் பேசிய கருத்துக்களுக்கு இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, பாடலாசிரியர் சினேகன் என பலரும்  கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தினர்  இதுவரை வாய் திறக்காதது ஏன் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பிரியாமணி, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் பருத்தி வீரன். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்றதோடு இயக்குநர் அமீர் , நடிகர் கார்த்தி என இருவருக்கும் அவர்களது திரைபயணத்தில் மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. 

இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக  சமீபத்தில் தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா பேசிய கருத்துக்கள் தான் தற்போது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது . "யாரும் அமீரிடம் நேரடியாக சென்று பருத்திவீரன் படம் பண்ணி கொடுங்கள் என்று கேட்கவில்லை. 58 லட்சம் ரூபாய் கடனுக்காக தான் அவர் அந்த படந்தை எனக்கு எடுத்து கொடுத்தார்" என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலடி தரும் விதமாக இயக்குனர் அமீர் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். 

“பருத்திவீரன்” தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து வெளிப்படையாக ஊடகங்களுக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.  

மேலும்  "பருத்திவீரன் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த அனைத்து விஷயங்களையும் அறிந்த திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூட இந்த பிரச்சினையை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அன்று நடந்த உண்மையை சொல்வதற்கு எனக்கு கொஞ்ச நேரம் கூட ஆகாது ஆனால் அது பலரின் வாழ்க்கையிலும் புயலை கிளப்பி விடும் என்பதால் அமைதியாக இருக்கிறேன். என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், "பருத்திவீரன் இறுதிகட்ட படபிடிப்பிற்கான முழு தொகையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருந்த போது பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் . இந்த பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு" என இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் தெரிவித்திருந்தார்.

அதே போல், "உங்களை தயாரிப்பாளர் ஆக்குனது, கார்த்தியை ஹீரோ ஆக்குனது அமீர் தான். எந்த நன்றி விசுவாசமும் இல்லாமல் பேசியிருக்கீங்களே பிரதர் இது தப்பில்லையா.. எங்கிருந்து வந்தது இந்த தைரியம் ... இந்த மாதிரி பொதுவெளியில் தப்பு தப்பா பேசுவதை இதோட நிறுத்திகோங்க. அது தான் எல்லாருக்கும் நல்லது" என  நடிகரும் இயக்குனருமான சமுத்ரகனியும் ஞானவேல் ராஜாவை கண்டித்து தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

மேலும், "ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன்.  மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில்  தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான்  நான் சொல்ல விரும்பும் விஷயம்.. "என்று இயக்குனர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளர்.

மேலும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக நடிகர் பொண்வண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக  திருடன்,வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க  உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..! பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும்,அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..! இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி  எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு  அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்” என கவிஞர் ஸ்நேகன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 

சினிமா துறையில் எப்போதெல்லாம் சர்ச்சைகள் எழுகிறதோ அப்பொழுதெல்லாம் தனது கருத்தை பகிரங்கமாக பதிவு செய்து வருபவர் நடிகர் சிவக்குமார். இந்நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசிய கருத்துக்களுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் பட்சத்தில் நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த யாரும் இது வரை வாய் திறக்கவில்லையே என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் கங்குவா படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி இறுதிப்போட்டிக்கு தேர்வான போட்டியாளர்களை நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் பாடல் பட வைத்து இசையமைப்பாளர் தமன் அசத்தியுள்ளார்.

கோலாகலமாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசன் நிகழ்ச்சி,  தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஃபைனலில் கலந்துகொள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டதோடு, நயன்தாரா நடித்திருக்கும் அன்னபூரணி படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் திறமையாளர்கள் பாடிய  பாடல் இந்த வார நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

தமிழின் முன்னணி தனியார் தொலைக்காட்சியில்,  பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி,  தமிழ் இசை உலகில் மிகப்பெரும்  மாற்றத்தை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள்,  சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும்  பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர்  என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது.  தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளக் கூடிய போட்டியாளர்களின் பெயர்கள் இந்த வாரம் சின்ன சர்ப்ரைஸுடன் அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க : திருவாரூரில் சோகம்: மின் தடையால் அரசு மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு!

இறுதிக்கட்டத்தை எட்டும் பாடகர்களுக்கு திரையில் வாய்ப்புகளை தருவதாக, இசையமைப்பாளர் தமன் வாக்குறுதி தந்திருந்த  நிலையில்,  இறுதிக்கட்டப் போட்டியாளர்கள் விரைவில் நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கும் அன்னபூரணி படத்தில் ஒரு அழகான பாடலைப் பாடியுள்ளனர். 

முன்னதாக இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல்  ஆகிய நால்வரும்  இணைந்து அன்னபூரணி படப்பாடாலைப் பாடியுள்ளனர். இவ்வார நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் திறமையாளர்கள் பாடிய அன்னபூரணி பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது,  போட்டியாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. 

முந்தைய நிகழ்ச்சிகளை விட இந்த முறை நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சியில் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது.  நடுவராக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு உற்சாகமாக கலந்துரையாடியதோடு, பலரின் வாழ்வை மாற்றும் வகையிலான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். 

மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர்வெடி கோகுல் என பாடகர்களை உற்சாகப்படுத்திய தமன், நிகழ்ச்சியின் நடுவர் ஆண்டனி தாசனுக்கும் ஒரு பாடல் வாய்ப்பு தந்து அசத்தியுள்ளார் தமன்.   

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திறமையாளர்கள் அனைவருக்கும் திரைப்பட பாடல் வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்துள்ளார் தமன். இசையமைப்பாளர் தமனின் நெகிழ்ச்சியான செயல்கள் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இதுவரையில் நான் எந்த ட்விட்டரையும் நீக்கியதில்லை, பயந்து பின் வாங்கக்கூடிய ஆள் குஷ்பு கிடையாது ஆவேசமாக பேசிய குஷ்பு...

அண்மை காலமாகவே, சினிமா பிரபலங்கள் சிலர் சர்ச்சையில் சிக்கி வருவது தொடர்ந்து வருகிறது. நடிகர் சிவகார்த்திக்கேயன் - இமான், அமீர் - ஞானவேல் பிரச்சினையை தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான் - திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் பெரியளவில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகை குஷ்பு உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் நடிகை குஷ்பு, அடுத்தகட்ட நடவடிக்கையாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். நடிகை திரிஷாவிற்காக பொங்கி எழும் நடிகை குஷ்பு, மணிப்பூரில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட போது நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? என்று சோசியல் மீடியாவில் குஷ்புவிற்கு எதிராக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி, மோசமான வார்த்தைகளால் பதிவிட்டிருந்தனர். 

இதற்கு தனது எக்ஸ் தளம் மூலம் பதிலளித்திருந்த நடிகை குஷ்பு, உங்களைப் போல ”சேரி” மொழியில் என்னால் பேச முடியாது. மணிப்பூர் விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கவனித்து பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், குஷ்புவின் இந்த பதிலுக்கு பிறகு தான் சாதாரண பிரச்சினையானது பூகம்பமாக வெடிக்க தொடங்கியது. என்னென்னா...குஷ்பு அந்த பதிவில், சேரி ,மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, நடிகையும், தேசிய மகளிரணி உறுப்பினருமான குஷ்பு இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததோடு மட்டுமில்லாமல், அவரது உருவபொம்மையை எரித்து வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளனர்.

இதற்கிடையில், மீண்டும் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்திருந்த குஷ்பு, நான் கிண்டலுடன் பதிவிட்ட பதிவு அது என்றும், அதோடு சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் நேசிப்பவர் என்று அர்த்தம் என்றும், நான் அன்பை பகிர்ந்து கொள்வதற்காக அந்த வார்த்தையை பதிவிட்டு இருந்தேன் என்றும், நான் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன் நிற்க கூடியவள் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, நான் ஊர்ல இல்லாத நேரத்தில் எனது வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளனர். ஆனால், காவல்துறையினர் தக்க சமயத்தில் அதனை தடுத்தி நிறுத்தியுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அரசாங்க வார்த்தையிலேயே சேரி என்கிற வார்த்தை வரும் என்று கூறியவர், சேரி வார்த்தை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். 

அத்துடன், வேளச்சேரி, செம்மஞ்சேரி என்ற பெயர்களில் கூடத்தான் சேரி உள்ளதாக குறிப்பிட்டவர், சேரி என்பது பிரஞ்சு மொழியில் அழகு என்பது தான் என்னுடைய கருத்து எனவும் தெரிவித்தார். மேலும் தகாத வார்த்தை நான் பயன்படுத்துவதில்லை எனவும், யாரையும் தவறாக பேசுவதில்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், திமுகவை குறிப்பிட்டு நான் எழுதிய பதிவிற்கு காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியவர், இதுவரையில் நான் எந்த ட்விட்டரையும் நீக்கியதில்லை, பயந்து பின் வாங்கக்கூடிய ஆள் குஷ்பு கிடையாது என்றும் ஆவேசமாக பேசினார். 

இப்படி நாம் பார்த்து ரசிக்கும் சினிமா பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், நெட்டிசன்கள் சிலர் சினிமாகாரங்கன்னா சர்ச்சையில் சிக்குவது புதுசா என்ன? இதெல்லாம் அரசியல்( சினிமா)ல சாதரணமப்பா! என்று சோசியல் மீடியாவில் கூறி வருகின்றனர்.

நடிகை த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

லியோ படத்தில் நடித்த த்ரிஷா குறித்து மிகவும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகானின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இதையும் படிக்க : ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை...!

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ, அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம் என்றும் வலியுறுத்தி உள்ளது.