ஆஸ்கர் விருது வழங்கும் குழுவில் நடிகர் சூர்யா!!

ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான படங்களை தேர்வு செய்யும் உறுப்பினர் குழுவுக்கு நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்கர் விருது வழங்கும் குழுவில் நடிகர் சூர்யா!!

உலகத் திரையுலகினரிடையே பெரும் கவுரகமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.  திரைப்படங்களை தேர்வு செய்யும் உறுப்பினர் குழுவில் புதிதாக 397 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர்கள், இயக்குநர்கள், ஆடை வடிவமைப்பாளர் என பல்வேறு துறைகளில் தேர்வு நடைபெறும் நிலையில், இந்தியாவில் இருந்து சூர்யா மற்றும் கஜோல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இந்த கவுரவத்தை ஏற்றிருந்தார். முன்னதாக நடிகர் சூர்யாவின் சூரறைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் விருதுப்பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.