சிவகார்த்திகேயனுக்கு “தேங்க்யூ” சொன்ன நடிகர் விமல்! ஏன் தெரியுமா?

நடிகர் விமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ’தேங்க்யூ தம்பி’ என்று பதிவிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு “தேங்க்யூ” சொன்ன நடிகர் விமல்! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கிராமத்து பாணியில் தொடர்ந்து நடிக்கும் நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில்  ’விலங்கு’ என்ற வெப்தொடர் வெளியானது. இந்த வெப்தொடரில் விமல் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருந்ததால் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது வந்தது. மேலும் இந்த படத்தில் கடைசி வரை கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் கொண்டுசெல்லப்பட்டதற்காக இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

இந்நிலையில் நடிகர் விமல் நடித்த ’விலங்கு’ வெப்தொடரை சமீபத்தில் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துக்களை படக்குழுவினர்களுக்கு தெரிவித்துள்ளார். ’விலங்கு’ தொடரில் நடிப்பு, உருவாக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை ஆகிய அனைத்துமே மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் குறிப்பாக விமலின் நடிப்பும் பிரசாந்தின் இயக்கமும் மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதிவிற்கு நடிகர் விமல் தனது ட்விட்டர் பக்கத்தில்  ’தேங்க்யூ தம்பி’ என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த பதிவிற்கு தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.