மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பிய பிரபல நடிகை...

பிரபல நடிகையும், தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக தனது  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டு இருக்கிறார். 

மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பிய பிரபல நடிகை...

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தான் நடிகை ராதிகா. இவர் படம் நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

பிரபல நடிகையும், தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் டுவிட்டர் பக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதனை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, நடிகை ராதிகாவும் இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார். 

இந்நிலையில், தற்போது மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் தான் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படத்தை  வெளியிட்டு , நான் கடற்கரையில் நடந்து எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை உணர்ந்தாக  குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.