"கருணையும் ஒருநாள் காலாவதி ஆகும்"- சமந்தா போட்ட டுவிட்! யாரை சொல்கிறார்? குழப்பத்தில் ரசிகர்கள்!!

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்ற அர்த்தத்தில் நடிகை சமந்தா போட்ட டுவிட் ரசிகர்கள் மத்தியில் இவர் யாரை சொல்கிறார் என்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறதாம்.

"கருணையும் ஒருநாள் காலாவதி ஆகும்"- சமந்தா போட்ட டுவிட்! யாரை சொல்கிறார்? குழப்பத்தில் ரசிகர்கள்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இவரை சர்ச்சைக்கு பேர் போனவருன்னு கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ஏதாவது ஒரு விஷயத்தில் இவரது பேர் வெளியே வராமல் இருக்கவே இருக்காது. அதுவும் சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு இணையம் முழுவதுமே இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்ற டாப்பிக் தான் அப்போதைக்கு ட்ரெண்டாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இவர்களின் பிரிவுக்கு சமந்தா தான் காரணம் என்று சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை அவர் மீது அள்ளிவிட்டனர்.

ஆனால் எதற்கும் அசராத நடிகை சமந்தா தன்னை பற்றி வரும் எந்த நெகட்டிவ் கமெண்ட்க்கும் பதிலளிக்காமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் கூட புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு நடனமாடிய சமந்தாவுக்கு ஆண்கள் தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும்,  அதை எதையுமே கண்டுகொள்ளாத நடிகை சமந்தா ஒரு சில விமர்சனங்களுக்கு மட்டும் அமைதியுடன் விளக்கம் அளித்து வந்தார்.

இப்படி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டு அமைதிகாத்து வந்த நடிகை சமந்தா, தற்போது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்ற கருத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்திருக்கிறார். அதாவது எனது மெளனம் மற்றும் அறியாமையை யாரும் தவறாக நினைத்துவிட கூடாது. எனது அமைதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனது கருணையை யாரும் எனது பலவீனமாக நினைத்து விடக்கூடாது. கருணையும் ஒருநாள் காலாவதி ஆகும்’ என்று அந்த பதிவில் கூறியுள்ளார். இந்த டுவிட்டை பாரத்த ரசிகர்கள் சமந்தா யாருக்காக இந்த பதிவை போட்டுள்ளார் என குழப்பத்தில் உள்ளார்களாம். 

அதற்கு  காரணம் சமீபத்தில் வெளியான நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி தான். ஒருவேளை நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து இணையத்தில் பரவி வரும் செய்தி தான் சமந்தாவின் இந்த பதிவிற்கு காரணமாக இருக்குமோ என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.