பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் எல்லாம் மாறி போச்சு... ராஜு குறித்து தாமரை செல்வி வருத்தம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ராஜு தன்னை கொண்டுகொள்ள விலை என தாமரை செல்வி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் எல்லாம் மாறி போச்சு... ராஜு குறித்து தாமரை செல்வி வருத்தம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தகட்ட ஷோவாக பிக்பாஸ் அல்டிமேட் ஷோ நடந்து வருகிறது.. இதில் இதுவரை நடைபெற்ற 5 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சிலரை மற்றும் தேர்வு செய்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோவை நடத்தி வருகின்றனர்.

கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இருந்து தாமரை செல்வி மட்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துக்கொண்டுள்ளார்... இந்நிலையில், பிக்பாஸ் 5ல் கலந்து கொண்ட ராஜு பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததும் தன்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.. இதுவரை ஒரே போன் கூட பண்ணி என்னிடம் பேச விலை என தாமரை செல்வி வருத்தமாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ராஜுவை தன் மூத்த மகனாக தான் நினைந்து வந்தாராம்.. அதனால்தான், அவருடன் அதிக நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தாராம்.. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பிறகு வெளிய வந்து தன்னிடம் பேசவே இல்லையாம்.. இது அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியாக தெரிவித்த தாமரை செல்வி, ஒரு சில நாட்கள தூங்காமல் இதையே நினைத்துக்கொண்டு வருந்தியுள்ளாராம்.

ஆனால் அக்ஷரா, வருண், இமான் அண்ணாச்சி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளிய வந்த பிறகு தன்னிடம் பாசமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது என தாமரை செல்வி கூறியிருக்கிறார். ஆனாலும், பாசத்தை ஒருவர் மீது அதிகமாக வைத்து விட்டால்... அதை எடுத்த முடியாது என வருத்தமாக கூறி கொண்டு இருந்த தாமரைக்கு ஜூலி ஆறுதல் கூறியிருக்கிறார்.

எல்லாரும் அப்படிதான், பக்கத்தில் இருக்கும் போது பாசமாக பேசுவார்கள்.. பழகுவார்கள்..  விலகி சென்றதும் நம்மளை கண்டு கொள்ள மாட்டார்கள்.. அதற்கு நாம் பீல் பண்ண கூடாது என்று ஜூலி கூறியிருக்கிறார்.. ஏற்கனவே சினேகன் கூட தன்னை தங்கச்சி என்று பாசத்துடன் பழகியதாகவும்.. வெளியே வந்ததும் கண்டு கொள்ள வில்லை என கூறி தாமரைக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.